2024 இந்தியத் தேர்தல்கள்: பத்திரிகையாளர் பாதுகாப்புக் கையேடு

மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவுக்கு வெளியே ஒரு வாக்குச்சாவடியில் பஞ்சாயத்து தேர்தலில் ஓட்டு போட மக்கள் வரிசையில் நிற்க, பாராமிலிட்டரி வீரர் ஒருவர் பாதுகாப்புக்கு நிற்கிறார். ஜூலை 8, 2023 (AFP/திப்யாங்ஷு சர்கார்)

2024இல் ஆளும் பாரதிய ஜனதா கட்சி(பாஜக) மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க தேர்தலை எதிர்கொள்கிறது. வரும் ஏப்ரல் 2024இல் நடக்கவிருக்கும் இந்த தேர்தலில் 60 கோடிக்கு அதிகமான எண்ணிக்கை கொண்ட இந்திய வாக்காளர் திரள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்த இருக்கிறது.

சிபிஜேவின் அவசரகால செயல்பாட்டுக் குழு இந்தியாவின் தேர்தல் குறித்து செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் கையேட்டை உருவாக்கியிருக்கிறது. இதில் பதிப்பாசிரியர்கள், நிருபர்கள், புகைப்படக்காரர்களுக்கான தகவல்கள் இருக்கின்றன. தேர்தலுக்கு தயாராவது எப்படி, டிஜிட்டல், உடல்ரீதியான, மனரீதியான ஆபத்துகளைக் குறைப்பது எப்படியென்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக பத்திரிகையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நிகழ்வுகள் அதிகரித்திருக்கின்றன. பிரச்சினை எழக்கூடிய அரசியல் செய்திகளில் தணிக்கை முயற்சிகள், செய்தி சேகரிப்பைக் கட்டுப்படுத்துதல் போன்றவை நிகழ்ந்திருக்கின்றன. கடந்த தேர்தல் மற்றும் கடந்த ஐந்தாண்டுகளின் போக்குகளை வைத்து, ஆயுதமேந்திய பிரச்சினைப் பகுதிகள் & நிகழ்வுகள் தரவுத் திட்டம்(ஏசிஎல்ஈடி) நமக்குக் காட்டுவது பத்திரிகையாளர்கள் அதிக தாக்குதல்கள், கும்பல் வன்முறைகள், பிற வன்முறை எதிர்ப்புகளுக்கு இலக்காகிறார்கள் என்பதையே. அதேநேரம், டிஜிட்டல் வெளியில் வெறுப்புப் பிரச்சாரத் தாக்குதல்கள், சைபர் மிரட்டல்கள், டிஜிட்டல் கண்காணிப்புகள் போன்றவையும் அதிகரித்திருக்கின்றன. இவற்றால் செய்தியறைகளும் ஊடகத்தினர் முழுமையுமே மனநல அழுத்தங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

ஆதாரம்:  ஆயுதமேந்திய பிரச்சினைப் பகுதிகள் & நிகழ்வுகள் தரவுத் திட்டம்; www.acleddata.com

ஏசிஎல்ஈடியின் நிகழ்வுவாரியான தரவுத் தொகுப்பு, உலகெங்கும் நடந்த அரசியல் வன்முறைகள், போராட்டங்கள் குறித்த தகவல்களையும் சில குறிப்பிட்ட வன்முறையல்லா நிகழ்வுகளையும் பிரித்து தொகுத்தளிக்கிறது. ஏசிஎல்ஈடி தரவு, சம்பவங்கள் நிகழும்போதே சேகரிக்கப்பட்டு வாராவாரம் வெளியிடப்படுவது. ஏசிஎல்ஈடி தரவுகளில் நிகழ்வு வகை, தொடர்புடையவர்கள், இடம், தேதி மற்றும் நிகழ்வின் பிற விவரங்கள் இடம்பெற்றிருக்கும். ஏசிஎல்ஈடி பின்பற்றும் முறையியல் பற்றிய விளக்கமான விவரங்களுக்கு ஏசிஎல்ஈடி கோட் புக்கை பார்க்கவும்.

தரவு விவரப்படங்கள் குறித்த குணால் மஜும்தரின் விளக்கம்

ஆதாரம்:  ஆயுதமேந்திய பிரச்சினைப் பகுதிகள் & நிகழ்வுகள் தரவுத் திட்டம்; www.acleddata.com

2019 பொதுத் தேர்தலுக்கு முந்திய காலத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்ததை, அதிலும் குறிப்பாக மேற்கு வங்கம், தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் அதிகரித்ததை ஏசிஎல்ஈடி தரவுகள் காட்டுகின்றன. அதேநேரத்தில் சிபிஜே ஆவணங்களும் பத்திரிகை செய்திகளும் கூட பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் மிரட்டல்களும் அதிகரித்திருப்பதைக் காட்டுகின்றன.

உதாரணமாக, பிப்ரவரி 2019இல், கட்சிக்காரர்களுக்கு இடையிலான சண்டையை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் பாஜக ஆதரவளார்கள் என சொல்லிக்கொண்டவர்களால் சட்டீஸ்கரில் தாக்கப்பட்டார். ஏப்ரல் 2019இல் தமிழ்நாட்டில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பேரணியில் காலி நாற்காலிகளைப் படமெடுத்த புகைப்பட பத்திரிகையாளரை காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் தாக்கினர்.

மேற்கு வங்கத்தில் பத்திரிகையாளர்களுக்கு எதிரானவை உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் அச்சுறுத்தும் அளவில் அதிகரித்ததை மே  6, 2019இல் சிபிஜே பதிவுசெய்திருக்கிறது. ஆளும் அனைத்திந்திய திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் எதிர்கட்சியான பாஜக ஆதரவாளர்களுக்கும் கொல்கத்தாவில் நடந்த மோதல் பராக்பூரில் வன்முறையாக வெடித்தது. இந்த நிகழ்ச்சிகளை பதிவுசெய்த பத்திரிகையாளர்களின் வாகனங்களில் கல் வீசப்பட்டது உள்ளிட்ட பல வழிகளில் மிரட்டப்பட்டனர். கெடுவாய்ப்பாக, இத்தகைய திட்டமிட்ட தாக்குதல்கள் தனிச் சம்பவங்கள் அல்ல; அதே நாளில் மேற்கு வங்கத்தின் ஹூக்லி மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் மோதல்களைப் பதிவுசெய்த பத்திரிகையாளர்களும் வன்முறைக்கு இலக்காகினர்.  

பத்திரிகையாளர்கள் மீண்டும் மீண்டும் அரசியல் வன்முறையில் பாதிக்கப்படுவதை இவை காட்டுகின்றன, இதனால் பாரபட்சமின்றி சுதந்திரமாக செய்தி சேகரிக்க முடியாமல் போகிறது.

அதற்குப் பின்னான ஆண்டுகளில் உத்தரபிரதேசம், கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட பிற இந்திய மாநிலங்களிலும் வன்முறைகள் அதிகரித்ததை ஏசிஎல்ஈடி தரவுகள் சுட்டுகின்றன. இந்த மாநிலங்களில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்திருப்பதை மே 2019இலிருந்து சிபிஜேவின் ஆவணப்படுத்தலும் காட்டுகின்றது. 2019இலிருந்து கொல்லப்பட்ட 11 பத்திரிகையாளர்களில் நான்கு பேர் உத்தரபிரதேசத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். டிசம்பர் 2020இல் கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர், அங்கே சட்டத்துக்கு புறம்பான பசு வதைக் கூடங்கள் இருந்ததை பதிவுசெய்ததற்காக ஒரு கூட்டத்தினரால் தாக்கப்பட்டார். செப்டம்பர் 2021இல் மைசூருவில் வலதுசாரிப் போராட்டக்காரர்களின் பேச்சைப் பதிவுசெய்த பத்திரிகையாளர் அவர்களால் தாக்கப்பட்டார்.

பத்திரிகை கண்ணியத்தைப் பாதுகாக்க, தகவல்கள் சுதந்திரமாக வெளியாவதை உறுதிசெய்ய, இந்த அரசியல்மயமான சூழலில் அதிக கவனமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தேவை என்பதை இத்தகைய பத்திரிகை தொடர்பான தாக்குதல்களின் வளர்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

பாதுகாப்புக் கையேடு உள்ளடக்கம்

விரோதமான சூழலில் செய்திகளை சேகரிக்க பணியாளர்களை அனுப்பும் பதிப்பாசிரியர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள்

தேர்தலுக்கு முன் பதிப்பாசிரியர்களும், செய்தி அறைகளும் முன்னறிவிப்பில்லாமல் பத்திரிகையாளர்களை  செய்தி சேகரிக்க அனுப்ப வேண்டிவரும். அப்போது பணியாளர்களுக்கு ஆபத்தைக் குறைக்கப் பின்பற்றக்கூடிய நடைமுறைகளும், கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகளும் இவை:

ஆபத்து அளவீடுகள் மற்றும் திட்டமிடல் குறித்து மேலும் விவரங்களுக்கு சிபிஜே ரிசோர்ஸ் செண்டரைப் பார்க்கவும்.

டிஜிட்டல் பாதுகாப்பு: அடிப்படைகள்

இணையத்திலும், மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தும்போதும் பாதுகாப்பாக இருக்க டிஜிட்டல் பாதுகாப்பு அடிப்படைகளைத் தெரிந்துகொள்வது முக்கியம். தேர்தல் செய்திப் பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர்களுக்கான சில பாதுகாப்பு நடைமுறைகள் இங்கே:

உங்கள் கணக்குகளை பாதுகாக்க
ஃபிஷிங் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு

மேலும் விரிவான விவரங்களுக்கு சிபிஜேவின் டிஜிட்டல் பாதுகாப்புக் கையேட்டைப் படியுங்கள்.

நியூ டெல்லி. இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்திய பாராளுமன்றத்தில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டபிறகு அவரது இருப்பிடம் முன் போலீஸும் ஊடகத்தினரும் கூடியிருக்கின்றனர். ரியூட்டர்ஸ்/ அனுஷ்ரீ ஃபத்னாவிஸ்.

டிஜிட்டல் பாதுகாப்பு: மின்னணு சாதனங்கள் தயார்நிலை

தேர்தலில் செய்தி சேகரிக்கும்போது பத்திரிகையாளர்கள் படம் எடுக்கவும், சேகரித்த செய்திகளை அனுப்பவும் தொலைபேசிகளைப் பயன்படுத்தலாம். தங்கள் சகபணியாளர்கள், செய்தி அளிப்பவர்களிடம் தொடர்பில் இருக்கவும் தொலைபேசியைப் பயன்படுத்துவர். இவற்றால் பத்திரிகையாளர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டால் டிஜிட்டல் பாதுகாப்புப் பிரச்சினைகள் உண்டாகும், அவர்களது தொலைபேசிகள் பறிக்கவோ உடைக்கவோ படலாம். செய்தியறை ரெய்டுகளும் நடக்கலாம், அதில் கணிணி உள்ளிட்ட சாதனங்கள் பறிக்கப்படலாம்.

உங்களை பாதுகாத்துக் கொள்ள:

டிஜிட்டல் பாதுகாப்பு: உளவுச் செயலிகள், டிஜிட்டல் கண்காணிப்பு

சிபிஜே நேர்காணல்கள் மற்றும் சிட்டிசன் லேபின் ஆய்வுகள்படி பெகாசஸ் போன்ற திட்டமிடப்பட்ட உளவு முயற்சிகள் இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட செய்திகள் இருக்கின்றன. ஒருமுறை உங்கள் தொலைபேசியில் நிறுவிவிட்டால் இந்த திறன்வாய்ந்த உளவுச் செயலிகள் உங்களது பாதுகாக்கப்பட்ட செய்திகள் உட்பட எல்லா செயல்பாடுகளையும் கண்காணிக்கும். அரசாங்களுக்கு சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பெகாசஸை வேவுபார்க்கும் கருவியாக விற்பதாக இஸ்ரேலின் என்.எஸ்.ஓ குழுமம் சொல்கிறது. ஒப்பந்தங்களுக்கு மாறாக அதன் செயலிகள் பயன்படுத்தப்பட்டதா என்பதை விசாரிப்பதாக சிபிஜேவிடம் பலமுறை சொல்லியிருக்கிறது.

உங்கள் சாதனங்களைப் பாதுகாக்க இவற்றை பின்பற்றுங்கள். 

உங்கள் சாதனத்தில் உளவுச் செயலிகள் இருப்பதாக சந்தேகம் வந்தால்:

பெகாசஸ் உளவுச் செயலி பற்றி மேலும் அறிய எங்கள் பாதுகாப்பு வழிகாட்டியைப் படியுங்கள்.

டிஜிட்டல் பாதுகாப்பு: இணைய முடக்கம்

தேர்தல் காலத்தில் முழுமையான மற்றும் பகுதி இணைய முடக்கங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவை பத்திரிகையாளர்களின் பணியில் நிறைய இடையூறுகள் விளைவிக்கும். இணையத்தை முடக்குவது அல்லது கட்டுப்படுத்துவதால், பத்திரிகையாளர்கள் தங்களுக்கு செய்தி தருபவர்களை தொடர்புகொள்ளவோ, தரவுகளை சரிபார்க்கவோ, செய்திகளை பதிப்பிக்கவோ முடியாமல் போகும். இந்தியாவில் இணைய முடக்கம் மற்றும் கட்டுப்பாடுகள், அவை ஊடகங்களில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றை சிபிஜே ஆவணப்படுத்தியுள்ளது.

பின்வரும் நடவடிக்கைகளால், இணைய முடக்கத்தின்போது பாதிப்புகளை குறைக்க முயற்சி செய்யுங்கள்:

இணைய முடக்கங்கள் பற்றிய விரிவான தகவல்களுக்கு சிபிஜேவின் கையேட்டைப் படியுங்கள்.

ஆகஸ்ட் 6, 2023. பந்திபோராவில் இந்திய ராணுவ வீரர் வசீம் அகமதின் இறுதிச்சடங்கின் போது கிராமத்தினர் ஒருவர் இந்திய ராணுவ வீரர்களுடன் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். தௌசீஃப் முஸ்தஃபா / AFP

டிஜிட்டல் பாதுகாப்பு: இணையத் தாக்குதல்கள், திட்டமிடப்பட்ட வெறுப்புப் பிரச்சாரங்கள்

திட்டமிடப்பட்ட இணைய வெறுப்புப் பிரச்சாரங்கள் உள்ளிட்ட இணையத் தாக்குதல்கள் தேர்தல் நேரத்தில் அதிகரிக்கும். பத்திரிகையாளர்களின், அவர்களது செய்திகளின் மதிப்பைக் குறைக்கவிரும்பும் நபர்களின் தாக்குதல்களுக்கு ஊடகப் பணியாளர்கள் இலக்காவார்கள். இவற்றில் திட்டமிட்ட வெறுப்புப் பிரச்சாரங்கள், போலிச் செய்தி பரப்புதல் போன்றவற்றால் பத்திரிகையாளர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தமுடியாமல் போகும், இணையத்தையே திறக்கமுடியாதபடி ஆகும். குறிப்பாக பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் ரீதியான, ஆணாதிக்க கொடுமைகளுக்கு இலக்காகிறார்கள். இந்தியாவின் பெண் பத்திரிகையாளர்கள் இத்தகைய கொடுமைக்கு ஆளாவதை சிபிஜே பலமுறை பதிவுசெய்திருக்கிறது. இணையத் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எளிதல்ல. ஆனால் பத்திரிகையாளர்கள் தங்களையும் தங்கள் கணக்குகளையும் பாதுகாக்க சிலவற்றைச் செய்யலாம்.

உங்களை பாதுகாத்துக் கொள்ள:
தாக்குதல்களின் போது:

இணைய வெறுப்புத் தாக்குதல்களில் உங்களைப் பாதுகாத்துக் கொள்வது பற்றி மேலும் விவரங்களுக்கு சிபிஜேவின்  இந்தப் பக்கத்தை பாருங்கள்.

உடல் பாதுகாப்பு: பேரணிகள், போராட்டங்களில் பாதுகாப்பாக செய்தி சேகரிப்பது

தேர்தல் காலத்தில் பேரணிகள், பிரச்சார நிகழ்வுகள், நேரலை ஒலிபரப்புகள், போராட்டங்கள் என பல இடங்களில் கூட்டத்தின் மத்தியில் பத்திரிகையாளர்கள் பணியாற்ற வேண்டியிருக்கும்.

ஆபத்தைக் குறைக்க:

அரசியல் நிகழ்வுகள், பேரணிகள்
போராட்டங்கள்

போராட்டங்களில் செய்தி சேகரிக்கும்போது ஆபத்தைக் குறைக்க:

கண்ணீர் புகையை எதிர்கொள்ளும்போது ஆபத்தைக் குறைக்க

இந்தியாவில் பத்திரிகையாளர்கள் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். தாக்குதல் நடைபெறும் சூழலில் பின்வருவனவற்றை யோசியுங்கள்:

உடல் பாதுகாப்பு: விரோதப் போக்குள்ள சூழல்களில் பாதுகாப்பாக செய்திசேகரிப்பது

ஊடகங்கள் அல்லது வெளியாட்களிடம் விரோதமாக நடந்துகொள்ளும் இடங்களிலும் சமூகங்களிலும் பத்திரிகையாளர்கள் பலநேரம் பணியாற்ற வேண்டியிருக்கும். ஊடகங்கள் தங்களை நியாயமாக காட்டவில்லை, எதிர்மறையாக காட்டுகிறார்கள் என்ற கருத்துகள் இருக்கும் இடங்களில் இப்படி நடக்கலாம். ஊடகங்களிடம் விரோதப் போக்குடைய சமூகங்களில் தேர்தல் நேரங்களில் பத்திரிகையாளர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி வரலாம்.

ஆபத்தைக் குறைக்க:

  • உங்கள் வாகனத்தை சட்டென்று எடுக்கத் தயாராக வைத்திருங்கள். ஒரு ஓட்டுநர் இருப்பது இன்னும் நல்லது.
  • உங்கள் போக்குவரத்தில் இருந்து தொலைவில் பணியாற்ற வேண்டும் என்றால், அதற்கு திரும்பும் வழியைத் தெரிந்துகொள்ளுங்கள். அடையாளங்களைப் பார்த்துவைத்து, அதை சகபணியாளர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.
  • மருத்துவ அவசரங்களில் எங்கே போவது என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். வெளியேறும் வழியை யோசித்து வையுங்கள்.
நவம்பர் 7, 2023. இம்பால், மணிப்பூர். எதிரெதிர் இனக்குழுக்களுக்கு இடையிலான புதிய சண்டையில் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்துக்கு ராணுவ வாகனம் செல்லாமல் மெய்டெய் சமூகத்தினர் சிலர் தடுக்கின்றனர். ரியூட்டர்ஸ்/ஸ்ட்ரிங்கர்

மனநல பாதுகாப்பு: செய்தியறையில் மன அதிர்ச்சியைக் கையாளுதல்

இவைபோன்ற செய்திகள், சூழ்நிலைகளில் நிறைய மன அழுத்தம் ஏற்படும், நீங்கள் மன அதிர்ச்சி (trauma) குறித்து யோசிக்கவேண்டும்:

இதுபோன்ற நாட்களில் நிர்வாகம் பணியாளர்களுக்கு வழிகாட்ட வேண்டும், அவர்களை பராமரிக்கும் பொறுப்பை ஏற்கவேண்டும். தேவைக்கேற்ப பின்வரும் வழிமுறைகளை யோசித்து நடைமுறைப்படுத்தலாம். செய்தியின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப நிர்வாகத்தின் வழிகாட்டுதலும் அதிகரிக்க வேண்டும்.

இதுபோன்ற நாட்களில்:

மனநல பாதுகாப்பு: அதிர்ச்சி தொடர்பான மன-அழுத்தத்தைக் கையாளுதல்

அதிர்ச்சிக்குப் பின்னான மன-உளைச்சல் (பி.டி.எஸ்.டி) மன அழுத்தம் தரும் செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் நிறைய எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாகும்.

வழக்கமாக, உயிராபத்துள்ள மிரட்டல் நிறைந்த சூழல்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் ஊடகப் பணியாளர்கள்தான் இந்தப் பிரச்சினைக்கு ஆளாவார்கள் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் சமீபமாக, எல்லாவித மன அழுத்தம் தரும் செய்திகளில் பணியாற்றுபவர்களும் பிடிஎஸ்டி அறிகுறிகளை உணர்வது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. வன்முறை (குற்றச்செயல் செய்திகள், குற்ற நீதிமன்ற வழக்குகள், திருட்டு போன்றவை), வன்கொடுமை, பெருமளவு உயிரிழப்பு (கார் விபத்துகள்/சுரங்க விபத்துகள்) இவை எல்லாமே மன அதிர்ச்சி உருவாக்கக் கூடியவை. இணையத்தில் கேலிசெய்யப்படும், மோசமாக திட்டப்படுபவர்களும் இத்தகைய அதிர்ச்சிசார் மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.  

தணிக்கையில்லாமல் இணையப் பயனர்களால் வெளியிடப்படும் காட்சிகள் டிஜிட்டல் போர்வெளி ஒன்றை உருவாக்கியிருக்கின்றன. இவற்றில் மரணம் போன்ற கொடூரமான காட்சிகளைப் பார்க்க நேரும் பத்திரிகையாளர்களும் பதிப்பாசிரியர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இத்தகையவை நேரடியாகப் பார்க்காமலே பிரதியெடுத்த மன அதிர்ச்சியை உண்டாக்குகின்றன.

பயங்கரமான நிகழ்வுகளையும்/ காட்சிப் பதிவுகளையும் பார்த்த பிறகு மன அழுத்தத்தால் கஷ்டப்படுவது இயல்பாக எல்லா மனிதர்களுக்கும் நிகழ்வதே என்பதை எல்லா பத்திரிகையாளர்களும் உணரவேண்டும். அது ஒரு பலவீனம் இல்லை.

எல்லோருக்கும்:

தொகுப்பாளர்களுக்கு:

களத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு:

வழக்கத்தை விட மோசமாக இருந்தால்:

உதவி தேவைப்படும் பத்திரிகையாளர்கள் சிபிஜே அவசர உதவியை தொடர்புகொள்ளலாம் emergencies@cpj.org அல்லது சிபிஜேவின் இந்திய பிரதிநிதி குணால் மஜும்தரைத் தொடர்புகொள்ளலாம்  kmajumder@cpj.org. தேர்தல் காலத்தில் பத்திரிகையாளர் பாதுகாப்பு பற்றி மேலும் விவரங்களுக்கு இந்த இணைய பக்கத்தைப் பாருங்கள்: Journalist Safety: Elections.

Exit mobile version