2021 மாநில சட்டசபை தேர்தல்கள்: பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டி

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலமான பீகாரில், பாலிகஞ் என்னுமிடத்தில் மாநிலத் தேர்தலின் போது வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் சமூக இடைவெளி விட்டு வரிசையில் நிற்கிறார்கள். 2021 ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவைக்கான தேர்தல் நடத்தத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. (AP/Aftab Alam Siddiqui)

அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் 2021 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளன.. 

இந்தத் தேர்தல் பற்றிய விவரங்களைச் சேகரிக்கும் பணியில் உள்ள ஊடகப் பணியாளர்கள் உடல் ரீதியான தாக்குதல், தீவிர மிரட்டல், துன்புறுத்தல், கொரோனா வைரஸ் தாக்கம், கைது செய்யப் படுதல், சிறையில் அடைக்கப் படுதல், அரசாங்கத்தின் இணையதளத் தொடர்பு சம்பந்தமான கட்டுப்பாடுகள் ஆகியவை பற்றி அறிந்திருப்பது அவசியம். 2020 ஆண்டில் இந்தியாவில் குறைந்த பட்சம் இரண்டு பத்திரிகையாளர்கள் தங்கள் வேலை தொடர்பாகத் தாக்குதலுக்கு உள்ளாகி மறைந்தனர். 

The Federal என்ற செய்தி இணைய தளத்தின் இணை ஆசிரியர் கெ.கெ. ஷஹீனா தொலைபேசி மூலம் CPJ இடம் பேசிய போது தெரிவித்தது வருமாறு. 

“பொதுவாக ஆசிரியர்கள் நிருபர்களிடம் தங்கள் பணியில் எதிர் கொள்ளக்கூடியத் தீவிர ஆபத்துக்களைப் பற்றி விசாரிப்பதில்லை. ஆபத்துகளை எதிர்கொள்ளவும், சமாளிக்கவும் உள்ள வழிகளைப் பற்றி இந்தத் துறையில் இதுவரை எந்த வழிமுறை கொடுக்கப்படவில்லை. அது பற்றிய எந்த விவரங்களும் இன்றியே செய்தியாளர்கள் பணிக்குச் செல்கிறார்கள்.”

CPJ Emergencies தேர்தல் களத்தில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டியினை உருவாக்கியுள்ளது. இதில் ஆசிரியர்கள், நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சட்டப்பேரவைத் தேர்தல் களப்பணிக்கு தங்களை எவ்வாறு தயார் செய்து கொள்வது என்று விளக்கியுள்ளது. இதில் டிஜிட்டல், உடல் மற்றும் மன ரீதியான தாக்குதல்களுக்கு எதிராக தங்களை எப்படித் தயார் செய்து கொள்வது என்ற விவரங்கள் தரப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் பாதுகாப்புக்கான வழிகாட்டிகள் PDF பதிவுகளாக ஆங்கிலம், தமிழ், பெங்காலி, அசாமீஸ், மலையாளம் ஆகிய மொழிகளில், டௌன்லோடு செய்யும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன.


தொடர்புக்கு 

CPJ Emergenciesஅவசரநிலைகளில் தொடர்பு கொள்ளலாம் emergencies@cpj.org. மூத்த ஆராய்ச்சியாளர் ஆலியா இப்திகரை aiftikhar@cpj.org என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது இந்திய நிருபர் குணால் மஜும்தாரை kmajumder@cpj.org என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

அதோடு CPJ-வின் தகவல் மையத்தில் “பணிக்குச் செல்வதற்கு முன்பு தயார் செய்து கொள்ளுதல்” மற்றும் “நிகழ்வுகளுக்குப் பிறகு தேவைப்படும் உதவி கள்” போன்ற விவரங்களைப் பெறலாம். 

ஃபிப்ரவரி 14, 2017 அன்று பத்திரிகையாளர்கள் புது டில்லி உச்சநீதி மன்றத்தின் வெளிப்புறத்தில் வேலை செய்கிறார்கள். (AP/Altaf Qadri)

ஆசிரியர்களுக்கான பாதுகாப்பு checklist

ஆசிரியர்கள் நிருபர்களை தேர்தல் நேரத்தில் மிகக்குறுகிய கால அவகாசத்தில் செய்தி சேகரிக்க அனுப்ப நேரலாம். எனவே இந்த checklist செய்தியாளர்கள் சந்திக்கக்கூடிய ஆபத்துக்களைக் குறைக்க எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை விளக்குகிறது.

செய்தியாளர்களைத் தேர்ந்தெடுத்தல்

பணிக்கான சாதனங்களும், போக்குவரத்து ஏற்பாடுகளும்

பொதுவான கருத்துக்கள்

ஆபத்து பற்றி கணிப்பது மற்றும் திட்டமிடுதலுக்கு CPJ Resource Center பார்க்கவும்.

நவம்பர் 6, 2020 அன்று எடுக்கப் பட்ட இந்த்ப் படத்தில், இந்தியாவில், மும்பையில் ஒரு பயனர் தன்னுடைய மொபைல் போனில் ஃபேஸ்புக்கின் வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்கிறார். (AFP/Indranil Mukherjee)

டிஜிட்டல் பாதுகாப்பு: அடிப்படை சாதனங்களை தயார் செய்தல்

தேர்தல் செய்தி சேகரிப்பின் போது செய்தியாளர்கள் தங்களுடைய அலைபேசியை (cell phone) செய்திகளைத் தொகுக்கவும், தகவல்கள் சேகரிக்கவும் உபயோகிக்கக் கூடும். செய்தியாளர்கள் பிடித்து வைத்துக் கொள்ளப் பட்டாலோ அல்லது அவர்கள் அலைபேசி பறிமுதல் செய்யப் பட்டாலோ, உடைந்து போனாலோ அவர்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்புப் பிரச்சனை உண்டாகலாம்.

எனவே பணிக் களத்துக்குச் செல்வதற்கு முன்:

டிஜிட்டல் பாதுகாப்பு பற்றிய மற்ற விவரங்களுக்கு Digital Safety Guide பார்க்கவும்.

டிஜிட்டல் பாதுகாப்பு: பதிவுகளை சேமித்தலும் பாதுகாத்தலும்

தேர்தல் நேரத்தில் செய்திகளை சேகரிப்பது, பாதுகாப்பதும் சம்பந்தமான வழிமுறைகளை ஏற்பாடு செய்து கொள்வது மிக அவசியம். ஒரு ஊடகப் பணியாளர் பிடித்து வைக்கப்பட்டால் அவர்களது சாதனங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு ஆராயப்படும். இதனால் செய்தியாளருக்கும் அவருக்கு செய்தி தருபவருக்கும் நிறைய பாதிப்பு ஏற்படலாம். தேர்தல் பணியின் போது சாதனங்கள் திருடப்படவோ, உடைக்கப்படவோ செய்யலாம். இதனால் சேகரிக்கப்பட்ட விவரங்களை சரியாக back up செய்யவில்லையானால் இழக்கவும் நேரலாம். 

கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் உங்களையும் உங்களால் சேகரிக்கப்பட்ட விவரங்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவும்:

டிஜிட்டல் பாதுகாப்பு: பாதுகாப்பான தகவல் தொடர்பு

எப்படி தகவல்களை பரிமாறிக் கொள்வது என்று தெளிவாக அறிந்து கொள்வது உங்கள் டிஜிட்டல் பாதுகாப்பின் மிக முக்கியமான அங்கம். அதுவும் கொரோனா காரணமாக ஊடக பணியாளர்கள் தொலைவில் இருந்து பணியாற்றுவதால் இது அவசியம். ஆசிரியர்கள் நேரில் சந்தித்துக் கொள்வதைத் தவிர்த்து conferencing platform மூலம் செய்திகள் பறிமாறிக் கொள்வதால் யார் யார் இந்த தொலை பேசி அழைப்புகளையும், webinar விவரங்களையும் அணுக முடியும் என்பது பற்றிய முடிவுகளை வரையறுத்துக் கொள்வது மிக அவசியமாகிறது. 

ஜூம் (Zoom) செயலியை உபயோகித்தல்:

ஜூம் (Zoom) அமைப்பை உபயோகிக்கும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை கவனித்துக் கொள்ளுங்கள்:

டிஜிட்டல் பாதுகாப்பு: இணையதள ட்ரோலிங் (Trolling), தவறான தகவல் பரப்புதல்

இலக்குக் குறிக்கப்பட்ட, பொய் பிரசாரங்கள் கூடிய தவறான இணையதள தொல்லைகள் தேர்தலின் போது அதிகரிக்கலாம். செய்தியாளர்கள் மற்றும் அவரது வேலைகளும் இணையதள தாக்குதல் நடத்துவோரால் இலக்குக் குறிக்கப்படுகின்றன. திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட தொந்தரவுகளாலும், தவறான பொய் பிரசாரங்களாலும் செய்தியாளர்கள் சமூக வலைதளங்களிலிருந்து விலகியிருக்க நிர்பந்திக்கப் படுவது அடிக்கடி நேரிடலாம். குறிப்பாக இந்தியாவில் பெண் நிருபர்கள் troll செய்யப்பட்ட பல நிகழ்வுகளை CPJ அறிந்திருக்கிறது. இதற்கு எதிராக தற்காப்பு செய்து கொள்வது எளிதல்லவென்றாலும் செய்தியாளர்கள் தங்களையும் தங்கள் account-களையும் காத்துக்கொள்ள சில முறைகளை பயன்படுத்தலாம்.

உங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள:

அக்கவுண்ட் பாதுகாப்பு

இணையதள தொல்லையாளர்கள் வலைதளங்களிலிருந்து உங்கள் சொந்த விவரங்களை உங்களுக்கு எதிராக பயன்படுத்துவார்கள். இதை தவிர்க்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்:

தாக்குதலின் போது:

ஜூன் 12, 2020 அன்று, கோவிட்-19 க்கு எதிரான கட்டுப் பாடுகளை அதிகாரிகள் தளர்த்திய பிறகு பத்திரிகையாளர் பர்கா தத் (BARKHA DUTT) குரு தேக் பகதூர் ஆஸ்பத்திரியிலிருந்து ரிப்போர்ட் செய்கிறார். (AFP/Prakash Singh)

உடல்ரீதியான பாதுகாப்பு: கொரோனா 

தேர்தல் நிகழ்ச்சிகள், அவை சம்பந்தமான போராட்டங்களின் போது மற்றவர்களிடமிருந்து விலகியிருந்து வேலை செய்வது என்பது கடினம். பொதுவிடங்களில் நடக்கும் பெரியக் கூட்டங்களில் பொது மக்கள் முகக்கவசம் அணியாமல் இருக்கலாம். ஊடக பணியாளர்கள் மற்ற நிருபர்களுடன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேர்ந்து இருக்க நேரலாம். இதனால் கொரோனா தாக்குதலுக்கும், கோபமாக இருக்கும் பொது மக்களின் பேச்சு மற்றும் உடல்ரீதியான தாக்குதலுக்கும் ஆளாகலாம். வேண்டுமென்றே செய்தியாளர்களின் அருகில் வந்து இருமுவது, தும்முவது போன்றவற்றை சிலர் செய்யலாம்.

மக்கள் ஆவேசமாக கத்தும்போது கொரோனா துளிகள் பரவும் வாய்ப்பு அதிகரிப்பதால் பணியாளர்கள் கொரோனா தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கலாம்.

கொரோனா சம்பந்தமான மற்ற விவரங்களுக்கு CPJ-யின் பாதுகாப்புக் குறிப்புப் பகுதியை CPJ’S Safety Advisory-யில் காணவும்.

ஃபிப்ரவரி 12, 2021 அன்று, இடது சாரிக் கட்சி மாணவர்கள் நடத்திய பேரணியின் போது போலீசாரின் வன்முறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் பங்கு பெறும் எதிர்ப்புப் போராட்டம். (AP/Bikas Das)

உடல்ரீதியான பாதுகாப்பு: தேர்தல் பிரசாரங்கள் மற்றும் போராட்டக் களத்திலிருந்தும் செய்தி சேகரிப்பு

தேர்தல் மற்றும் போராட்டங்கள் பற்றி செய்தி சேகரிக்கும் போது நெரிசல் மிகுந்த பேரணிகள், பிரசாரக் கூட்டங்களில் ஏற்படும் ஆபத்துக்களைத் தவிர்க்க பின்வரும் பாதுகாப்பு அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும்:

அரசியல் நிகழ்வு மற்றும் பேரணிகள்

போராட்டங்கள்: திட்டமிடல்

விழிப்புணர்வு:

டிசம்பர் 11, 2019 அன்று இந்தியாவில் குடியுரிமைச் சீர்திருத்த மசோதாவிற்கு எதிராக நட்த்தப் பட்ட போராட்டத்தின் போது போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை உபயோகிக்கிறார்கள். (AP/Anupam Nath)

போலீசாரால் கண்ணீர் புகை குண்டு உபயோகப் படப்பட்டால்:

கண்ணீர் புகையினால் தும்மல், இருமல், எச்சல் துப்புதல், கண்ணீர் வருதல், சளி உருவாகி மூச்சை அடைத்தல் போன்றவை ஏற்படும். சில பேருக்கு வாந்தி எடுப்பதால்  மூச்சு விடுதல் மிகச் சிரமமாகலாம். இந்த அறிகுறிகள், காற்றில் மிதக்கும் கொரோனா துளிகள் மூலம் தொற்று பரவ நேரிடும் சாத்தியத்தை அதிகப் படுத்துகிறது. இதனால், ஆஸ்துமா (asthma) போன்ற சுவாசப் பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள், கொரோனாவால் பாதிக்கப்படும் சாத்தியமுள்ளவர்கள் போராட்டம் போன்ற நிகழ்வுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும், NPR எடுத்துக் காட்டியது போல, கண்ணீர் புகை ஒருவருக்கு கொரோனா போன்ற நோய்த்தொற்றுக் கிருமிகள் தாக்கும் சாத்தியத்தை அதிகப் படுத்துகிறது.

கண்ணீர் புகை தாக்குதல், அதன் விளைவுகள் பற்றி மேலும் அறியவும், வழிகாட்டுதலுக்கும், CPJ’s civil disorder advisory பார்க்கவும். 

உடல் ரீதியான தாக்குதல்:

இந்தியாவில் போராட்டம் செய்பவர்கள் பத்திரிகையாளர்களைத் தாக்கியது உண்டு. அத்தகைய முரட்டுத்தனத்தை சந்திக்கும் போது பின்வருவனவற்றை கருத்தில் கொள்க:


உடல்ரீதியான பாதுகாப்பு: விரோத சூழலிலிருந்து செய்தி சேகரிப்பு

பத்திரிகையாளர்கள் சில நேரங்களில் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளிலிருந்து ரிப்போர்ட் செய்ய வேண்டி வரும். அக்கூட்டம், தங்களைப் பற்றி தவறாகவும், எதிர் மறையாகவும் ஊடகங்கள் சித்தரிப்பார்கள் என்று எண்ணலாம். தேர்தல் சமயங்களில் பத்திரிகையாளர்கள் அம்மாதிரி விரோத மனப்பான்மை கொண்ட கூட்டங்களில் நீண்ட நேரம் வேலை செய்ய நேரிடலாம்.

அம்மாதிரியான ஆபத்துக்களை தவிர்க்க:

Exit mobile version