கொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்

PEDRO PARDO / AFP

Updated May 20, 2021

11 மார்ச் 2020, அன்று உலக சுதாகார அமைப்பு – WHO – COVID -19 அதாவது நாவல் கொரோனா பரப்பும் நோயை உலகளவில் ஒரு பெருந்தொற்று என்று அறிவித்தது. உலகளவில் நிலமை பரிணாம மாற்றம் அடைந்து கொண்டே போகிறது. செய்திகள் மூலம் கிடைக்கும் தகவல் படி புதிய கொரொனோ வைரஸ் வகைகள் அடையாளம் காணப் பட்டு வருவதாலும் தடுப்பூசி நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப் பட்டு வருவதாலும் பல நாடுகள் பயணக் கட்டுப் பாடுகளையும் பாதுகாப்பு சம்பந்தமான நடவடிக்கைகளையும் அதிகப் படுத்துவது அல்லது தளர்த்துவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

முக்கியமாக, தனிப்பட்ட செய்தி வெளியீடு மற்றும் தகவல் தொடர்புக்கு எதிராக அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைளையும் மீறி, உலகம் முழுவதும் பத்திரியாளர்கள் மூலம் பெருந்தொற்று, அதற்கு எதிராக அரசுகள் எடுக்கின்ற நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் CPJ பதிவு செய்துள்ள படி  மக்களுக்கு சரியான  விதத்தில் போய்ச் சேருகின்றன. ஊடகப் பணியாளர்கள் மிக அதிக அளவில் மன அழுத்தத்திற்கும் பிரச்சனைக்கும் ஆளாகிறார்கள். இதனால் ஊடகத்தை சேர்ந்த ஒவ்வருவரும்  பயணம், பேட்டி, அல்லது அவர் செல்கின்ற இடத்தினால் – தொற்றுக்கு ஆளாகிறார்கள். CPJ’S INTERVIEW WITH JOURNALISTS. கோவிட் – 19 தொற்றினால் பத்திரிகையாளர்கள் மீதான தணிக்கை நடவடிக்கை, பிடித்து வைக்கப் படுதல், உடல் மற்றும் மன ரீதியான இணையதளத் தாக்குதல், தங்கள் வாழ்வாதார இழப்பு ஆகியவற்றுக்கு ஆளாகியுள்ளனர் IN RECENT REPORTING BY CPJ.

இந்தத் தொற்று சம்பந்தமான அறிவுரைகள் மற்றும் கட்டுப் பாடுகள் பற்றி அறிய இந்த விவரங்களை சேகரிக்கும் பத்திரிகையாளர்கள்  உள்ளூர் சுகாதார  அமைப்புகள் மற்றும் உலக சுகாதார மையத்திலிருந்து வெளியிடப் படும் தகவல்களை கவனித்து வர வேண்டும். சமீபத்திய தாக்கம் பற்றிய செய்திகளுக்கு Johns Hopkins University Coronovirus Resource Center . பாதுகாப்பான மற்றும் நம்பத்தகுந்த ஆதாரமாகும்.

பணித் தளத்தில் பத்திரமாக இருத்தல்:

நாடுகளுக்கு இடையிலான கட்டுப் பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மாறிக் கொண்டேயிருக்கின்றன. அதனால் பணிகள் மாறவோ, ரத்து செய்யப் படவோ நேரலாம். U.S. Centers for Disease control and Prevention (CDC) யின் அறிக்கைப் படி தடுப்பூசி போடப் பட்ட ஊடகப் பணியாளர்கள மூலமும் தொற்று பரவலாம். Yale Medicine அறிக்கையின் படி வெவ்வேறு தடுப்பூசிகள் வெவ்வேறு வகையான வைரஸ்களுக்கு எதிராக வெவ்வேறு அளவிலான பாதுகாப்பு அளிக்கின்றன. எனவே பாதுகாப்பான இடைவெளி காத்தல், முக்க்கவசம் அணிதல் ஆகிய கோவிட்- 19 தொற்று சம்பந்தமான பாதுகாப்பு கட்டுப் பாடுகள் கடைப் பிடிக்கப் பட வேண்டும்

COVID-19 பெருந்தொற்றை பற்றி செய்தி சேகரிப்பவர்கள் பின்வரும் பாதுகாப்பு தகவல்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்:

பணிக்கு முன்னால்:

மனோதத்துவ நலம்:

தொற்று தடுத்தல் மற்றும் பிறருக்குத் தொற்று வராமல் தவிர்ப்பது:

எல்லா நாடுகளும் சமுதாய மற்றும் உடலளவிலான இடைவெளி கடைப் பிடிப்பதைத் (தொடருகிறார்கள். அதற்கான அளவுகள் அந்தந்த நாடுகளில் வேறாக இருக்கலாம். அதிக ஆபத்துள்ள இடங்களில் பணியில் இருந்தால் முன்னதாக அங்கு செயலில் உள்ள சுகாதார முறைகள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். சந்தேகம் இருந்தால் அந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து விடுங்கள்.

 தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கான நிலையான பரிந்துரைகள்   பின்வருமாறு:

மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள்- (PPE)

வேலையின் இயல்புக்கேற்ப ஊடகப் பணியாளர்கள் பணிக்காக பல விதமான மருத்துவ PPE உபகரணங்களை அணியத் தேவைப் படலாம். ஒரே முறை உபயோக்க்கூடிய கையுறைகள், முக்க்கவசங்கள், பாதுகாப்பு மேலணிகள், காலணிகள் இவற்றில் சேரும்.

PPE உறைகளைப் பத்திரமாக அணிவதும், கழற்றுவதும் பாதுகாப்பு முறைகளை முறையாகக் கையாளுவதும் அவசியம். முக்கியமாக PPE கழற்றும் போது கவனம் தேவை. ஏனென்றால் அப்போது CROSS CONTAMINATION மூலம் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம். எனவே அதற்கான முறைகளை சரியாக அறிய இங்கு பார்க்கவும்.சில நாடுகளில் தரமான PPE கிடைப்பதில் பிரச்சனை  இருக்கலாம். எனவே பயன்படுத்துவதற்கு கிடைக்காமல் போகலாம்.

முகக்கவசம்:

பொது ஜனங்களின் இடையேயும், மூடப் பட்ட இடங்களிலும் அதிக ஆபத்தான இடங்களிலும் பணி புரியும் ஊடகப் பணியாளர்கள் சரியான முறையில் முகக்கவசம் அணிவது மிக முக்கியம். காற்றில் கிருமித் தொற்றின் துளிகள் அதிகமாக இருக்கும் வாய்ப்பு மூடப்பட்ட இடங்களில் சராசரியை விடக் கணிசமான அளவில் அதிகமாக இருக்கும் என்பதால் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்.

சரியாகப் பயன்படுத்தப் படாவிட்டால் முகக்கவசங்களே தொற்று பரவுவதற்கு ஆதாரமாக அமையும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். LANCET ஆல் நடத்தப் பட்ட ஆய்வில் சர்ஜிகல் மாஸ்க் உபயோகப் படுத்தப் பட்ட பின் ஏழு நாட்களுக்குப் பிறகும் அறியக் கூடிய அளவில் தொற்றுக் கிருமிகள் இருந்தது தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் ஒருமுறை உபயோகப் படுத்தப் பட்ட முக்கவசத்தை நீக்குவதும், திரும்ப உபயோகிப்பதும், அணிந்திருக்கும் போது தொடுவதும் தொற்றுக்கான வாய்ப்பை உண்டாக்கும்.

நீங்கள் முக்கவசம் அணியும் போது கவனிக்க வேண்டிய அறிவுரைகள்:

உபகரணப் பாதுகாப்பு:

தொற்று பாதிக்கப் பட்ட உபகரணங்கள் மூலம் பரவும் என்பது உண்மை. கண்டிப்பான சுத்தம் செய்தல் மற்றும் தொற்று நீக்கம் செய்யும் பழக்கம் எல்லா நேரங்களிலும் செயல் படுத்தப் பட வேண்டியது அவசியம்.

மின் சாதன சுத்தம்:

மின் சாதனங்களை சுத்தம் செய்வது சம்ப்ந்தமான சில குறிப்புகள்:  உபகரணங்களின் தயாரிப்பாளர்களின் வழிகாட்டிகளை முறையாக படித்து நிச்சயம் செய்து கொள்ளுங்கள்.

டிஜிட்டல் பாதுகாப்பு:

பணியின் போது நடக்கும் குற்றம் மற்றும் உடல் பாதுகாப்பு:

சர்வதேசப் பயணப் பணிகள்:

உலகளாவிய கட்டுப் பாடுகளினால் அயல் நாட்டுப் பயணம் சவாலாக உள்ளது, அயல் நாட்டுப் பணிகளில் ஈடுபட நேர்ந்தால்  கவனிக்க வேண்டியவை:

பணிக்குப் பிறகு:

உங்களுக்கு நோயின் அறிகுறிகள் தோன்றினால்:

CPJ  வின் பத்திரிகையாளர்களுக்கும் செய்தி அறைகளுக்கும் உடல் ரீதியான, மற்றும் மன ரீதியான அடிப்படை உபகரணங்கள், வழிகள் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. மற்றும் தேர்தல் சம்பந்தமான விவர்ங்களையும் கொண்டுள்ளது.

எடிட்டரின் குறிப்பு: இந்த அறிக்கை 20, Feb, 2020 யில் முதன் முதலாக வெளியிடப் பட்ட்து. அதற்குப் பிறகு அடிக்கடி மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.  வெளியீட்டுத் தேதி சமீபத்திய வெளியீட்டைக் குறிக்கிறது.

Exit mobile version