இணைய முடக்கங்களின் போது: டிஜிட்டல் பாதுகாப்பு 

Kashmiri journalists hold placards and protest against 100 days of internet blockade in the region in Srinagar, Indian controlled Kashmir, Tuesday, Nov. 12, 2019. Internet services have been cut since Aug. 5 when Indian-controlled Kashmir's semi-autonomous status was removed. (AP Photo/Mukhtar Khan)

இணைய முடக்கங்கள் பத்திரிகைச் சுதந்திரத்தில் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்துவதையும் அவை ஊடகவியலாளர்கள் தமது பணியை வினைத்திறனுடன் செய்வதை போராட்டம் மிக்க விடயமாக மாற்றுவதையும் CPJ கண்டறிந்துள்ளது. இணையத்தை செயலிழக்க செய்வது அல்லது அதன் மீதான அணுகலை மட்டுப்படுத்தல் காரணமாக ஊடகப் பணியாளர்கள் தமது மூலங்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை, மற்றும் தரவுகளின் யதார்த்த நிலையை சோதனை செய்தல் போன்ற விடயங்களை மேற்கொள்ள முடியாமல் போவதுடன் நிகழ்வு ஒன்று நிகழ்ந்த பின்னர் கூட கதைகளை அறிக்கையிட முடியாமல் போகின்றது. Access Now என்ற அமைப்பின் சர்வதேச கண்காணிப்பாளர்களின் கூற்றுகளுக்கு ஏற்ப, முரண்பாட்டு சூழ்நிலைகள், அரசியல் நெருக்கடிகள் அல்லது தேர்தல் காலம் போன்ற சந்தர்ப்பங்களில் தகவல்களுக்கான மக்களின் அணுகலை மட்டுப்படுத்தும் நோக்கில் இணைய முடக்கங்கள் அரசாங்கங்களினால் ஏற்படுத்தப்படும் சாத்தியம் அதிகமாகக் காணப்படுகின்றது. 

இணைய முடக்கங்களின் பல்வேறுபட்ட வகைகள் காணப்படுவதுடன் அவை நாடு முழுவதும் அல்லது நாடு ஒன்றின் குறிப்பிட்ட பிராந்தியங்களில் ஏற்படுத்தப்படலாம். முழுமையான இணைய மற்றும் தகவல் தொடர்பு சீர்குலைவு ஒன்றை எதிர்கொள்ளும் ஊடகவியலாளர்கள் அதன் பொழுது இணையத்தை அணுகவோ அல்லது ஏனையோரை செல்லிடப் பேசி அல்லது நிலையான தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது. தொடர்பாடல் செயலிகள் அல்லது YouTube  போன்ற குறிப்பிட்ட தளங்களை மட்டுப்படுத்துமாறு அரசாங்கங்கள் இணைய சேவை வழங்குனர்களுக்கு பணிப்புரைகளை விடுக்க முடியம். குறிப்பாக பகுதியளவிலான முடக்கத்தின் போது ஊடக பணியாளர்கள் ஏனையோருடன் தொடர்பாட கொண்டுள்ள இயலுமை அல்லது தமது உள்ளடக்கங்களை இணையத்துக்கு பதிவேற்றம் செய்யும் இயலுமை என்பனவும் கட்டுப்படுத்தப்படலாம். 

அனைத்து வகை இணைய முடக்கங்களையும் கையாள்வதில் தயாராக இருத்தல் முக்கிய விடயமாக அமைகின்றது. இணைய முடக்கங்கள் பற்றிய கரிசனை கொண்ட ஊடகவியலாளர்களுக்கு பின்வரும் தகவல்கள் பயன் மிக்கனவாக இருக்க முடியும்.

டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான சிறப்பான நடைமுறைகள் 

முடக்கம் ஒன்றுக்கு முன்னர் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான சிறப்பான நடைமுறைகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் இணைய முடக்கம் ஒன்றின் போது நீங்கள் அறிக்கையிடலை மேற்கொள்வதற்கு சிறப்பாக தயார் நிலையில் இருப்பதற்கும் சிறந்த பாதுகாப்பை பெற்றுக்கொள்வதற்கும் வழிவகுக்கும். 

CPJ இன் டிஜிட்டல் பாதுகாப்பு தொகுதியில் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் Encryption செய்யப்பட்ட தொடர்பாடல் பற்றி மேலும் கற்றுக்கொள்ளுங்கள். 

இணைய முடக்கங்களை எதிர்கொள்ள தயாராகுதல் 

சரியான கருவிகளை தெரிவு செய்யயுங்கள்

இணையக் கருவிகள் பாதுகாப்பு மீறல்களுக்கு உட்படக் கூடியன. விசேடமாக, குறுந்தகவல் அனுப்பும் செயலிகள் போன்ற தொடர்பாடல் கருவிகள் பற்றிய அண்மித்த டிஜிட்டல் பாதுகாப்பு தகவல்களை அறிந்து வைத்திருங்கள். பின்வரும் அறிவுரை 2021 ஏப்ரல் மாதம் பெறப்பட்டனவாகும். 

இணைய முடக்கம் ஒன்றின் போது

இணைய முடக்கம் ஒன்றின் பின்னர்

ஏனைய வளங்கள்

Exit mobile version